அரூரில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி பட்டறை துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பங்கேற்று வகுப்பெடுத்தார்

viduthalai
2 Min Read

அரூர், பிப். 11- அரூர் கழக மாவட்ட திராவிடர் கழக சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை அரூர் கலை அறிவியல் கல்லூ ரியில் நடைபெற்றது. தொடக்க நிகழ்விற்கு மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமையயேற்றார்.

மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ் திலீபன் அனை வரையும் வரவேற்று உரையாற் றினார். தலைமை கழக அமைப் பாளர் ஊமை. ஜெயராமன் தொடக்க உரையாற்றினார்.
மாநில மகளிர் அணி செய லாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவார்கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாநில இளைஞ ரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, ஆசிரியர் அன் பரசு வெண்ணிலா, பொதுக் குழு உறுப்பினர் வேங்கை தமிழ்ச்செல்வன் பகுத்தறிவா ளர் கழக கழக பொறுப்பாளர் ஆசிரியர் த.சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பகுத்தறிவாளர் கழக மாநில கலைத்துறை செயலா ளர் இயக்குனர் மாரி.கருணா நிதி அறிமுக உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சா.ராஜேந்திரன், திமுக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் மெடிக் கல் சத்தியமூர்த்தி, அண்ணல் அம்பேத்கர் அறிவகம் அறக் கட்டளை செயலாளர் அம் பேத்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மேனாள் அமைச்சர் பி.பழனியப்பன் பயிற்சி பட்டறைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியார் பயிற்சிப் பட்டறை பொறுப் பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத் தினார். பார்ப்பன பண்பாட்டு படை எடுப்புகள் என்ற தலைப் பில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர்.கலி. பூங்குன் றன் அவர்கள் முதல் வகுப்பை நடத்தினார்.
தொடர்ந்து முனைவர் துரை.சந்திரசேகரன் “இந்து இந்துத்துவா ஆர்எஸ்எஸ்” என்ற தலைப்பிலும், ஆசிரியர் அழகிரிசாமி “தந்தை பெரியார் ஓர் அறிமுகம்” என்ற தலைப் பிலும், முனைவர் அதிரடி. அன்பழகன் “சமூக நீதி வரலாறு” என்ற தலைப்பிலும், வழக்கு ரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார் “தந்தை பெரியாரின் பெண் உரிமை சிந்தனைகள்” என்ற தலைப்பிலும், எழுத் தாளர் வி.சி.வில்வம் “தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் சாதனைகள்” என்ற தலைப்பிலும், ஈட்டி கணேசன் “மந்திரமா தந்திரமா அறிவியல் விளக்கம்” என்ற தலைப்பில் வகுப்பெடுத்தனர்.

கல்லூரி பள்ளி மாணவர் கள் 290 பேரும் கழகத் தோழர் களும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
196 பெண்கள் 94 ஆண்கள்
34 பள்ளி மாணவர்கள்
256 கல்லூரி மாணவர்கள்
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
சிறப்பாக குறிப்பு எடுத்த மொண்டுகுழி மோனிஷா, ஏ.பள்ளிப்பட்டி செ.தமிழரசி பட்டுக்கோணம்பட்டி ஜே.கவின்குமார், முனைவர் பொ.கலைவாணி, கே. வேட்றப் பட்டி தே. கனிமொழி ஆகிய 5 மாணவர்ளுக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
ரூ.4,255க்குப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *