தந்தை பெரியார் முயற்சியால் தொடங்கப்பட்ட ஈரோடு சிக்கய்ய (நாயக்கர்) கல்லூரி வளாகத்தில் கோயில் கட்டுவதா?

1 Min Read

ஈரோடு சிக்கய்ய (நாய்க்கர்) கல்லூரி 1954இல் தந்தை பெரியார் அவர்களின் முயற்சியால் மகாஜனக் கல்லூரி என்ற பெயரில் தொடங்கி சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி எனப் பெயர் மாற்றத்தோடு தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியில் ஆயிரக்கணக் கான ஏழை, எளியவர்கள் வீட்டுக் குழந்தைகள் குறைந்த கட்டணத் தில் பயின்று வருகிறார்கள். ஜாதி, மத வேறுபாடின்றி இந்து, இஸ்லாம், கிறித்துவர் மற்றும் நாத்திகர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மாண வர்கள் பயிலும் கல்லூரியாக உட் பட அனைத்துத் தரப்பு மாணவர் கள் பயிலும் கல்லூரியாக இயங்கும் நிலையில்,
கல்லூரி வளாகத்தில் சிறிய கற்சிலை, சிதலமடைந்த சிறு கட்ட டம் ஒன்று இருக்கிறது. அதனை இந் துத்வா-ஜாதிவெறியை பின்பற் றும் சில பேராசிரியர்கள் – இந்துத் வாவை பின்பற்றும் சில வெளி அமைப்புகள் பின்னனியில் பெரிய கோவிலாகக் கட்டத்திட்டமிட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் கட்டாய வசூல் நடத்துவதாகவும் தெரிய வருகிறது.

சில பேராசிரியர்கள் பாடம் நடத்துவதைவிட மத வெறி, ஜாதி வெறியை மாணவர்கள் மத்தியில் தூண்டிவிடுவதாகவும் தெரிகிறது.
தமிழ்நாடு அரசும்-காவல்துறை யும் (உளவுத்துறை) கண்காணித்து இதுபோன்று நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுத்து கல்லூரி வளாகத்தில் கோவில் கட்டுவதைத் தடுத்து ஜாதி-மதக் கலவரங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட கல்லூரியான சிக்கய்ய (நாய்க்கர்) கல்லூரியில் இந்த அவலமா?
கல்லூரி வளாகத்தில் கோவில் கட்டினால் சட்ட ஒழுங்குப் பிரச் சினை ஈரோட்டில் ஏற்பட வாய்ப் பிருக்கும் என அஞ்சுகிறோம்.
– த.சண்முகம்
தலைமைக் கழக அமைப்பாளர்
திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *