ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் அறிமுகம்

viduthalai
1 Min Read

சென்னை, பிப். 9- சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்திடம் துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் கூடுதலாக ரூ.269 கோடி மதிப்பில் 3 பெட்டிகள் கொண்ட 10 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்க உள்ளது.
மெட்ரோ ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டத் தின் கீழ் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி டிரைவர் இல்லாத 3 பெட்டிகள் கொண்ட 26 மெட்ரோ ரயில்கள் (மொத்தம் 78 பெட்டிகள்) உரு வாக்கம் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போஸ்ட் நிறுவனத்திற்கு ரூ.946 கோடியே 92 லட்சத்தில் வழங் கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் துணை ஒப்பந்தத்தில் கையெழுத் திட்ட அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறு வனம் கூடுதலாக ரூ.269 கோடி மதிப்பில் 3 பெட்டி கள் கொண்ட 10 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்க உள்ளது. எனவே, மொத்தமாக 108 பெட்டிகள் கொண்ட 36 மெட்ரோ ரயில்களை அல்ஸ்டோம் டிரான்ஸ்போஸ்ட் நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில்வேயிடம் ஒப்பந்தம் அடிப்படையில் வழங்க இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ ரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்கள் பயிற்சி, உதிரிப் பாகங்கள் வழங்குதல் மற்றும் குறைபாடுகளுக்கு பொறுப்பு ஏற்பு உள்ளிட்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் வழங்க வேண்டும் என கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *