மதுரை-வெள்ள நிவாரணப்பொருட்கள்

1 Min Read

சென்னையில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் தனி வாகனத்தில் 23.12.2023 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு, அடுத்த நாள் (24.12.2024) மதுரைக்குச் சென்றன.
தோழர் சே.முனியசாமி 100 போர்வைகள், 100 சேலை கள், 250 கைலி, 700 பிரட், 1000 பிஸ்கட், 1000 தண்ணீர் பாட்டில்கள், 5 உள்ளாடைகள் என ரூ.39,000 மதிப்பிலான பொருட்களையும், தோழர்கள் அ.முருகானந்தம், நா.கணே சன், மணிராஜ், சுப்பையா, முனைவர் வா. நேரு, ஓய்வு பெற்ற (ஏஇஓ) சோ.பால்ராஜ், சண்முகசுந்தரம், போட்டோ ராதா, பேக்கரி கண்ணன், எல்.அய்.சி. மோதிலால், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி உள்ளிட்டோர் சார்பில் மொத்தமாக ரூபாய் 30,500 மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும், மதுரை தோழர் அழகுபாண்டி 10 கைலி, அய்ந்து நைட்டி ஆகியவற்றையும் சேகரித்து வைத் திருந்தனர். அவற்றையும் ஏற்றிக் கொண்டு அன்று மாலை தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் பெரியார் பெருந்தொண் டர் காசி வசம் நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. அங்கிருந்த பெரியார் தொண்டறம் அணி தோழர்களின் உதவியுடன் தேவைப்பட்ட மக்களுக்கு அந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *