ஒன்றிய பிஜேபி அரசை வீழ்த்தி – கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்

viduthalai
4 Min Read

ஒன்றிய பிஜேபி அரசை வீழ்த்தி – கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்
டில்லி போராட்டத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

சென்னை,பிப்.9- ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், டில்லி, ஜந்தர்மந்தரில் கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அதில், வணக்கம்! கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களே! சி.பி.அய்.எம். பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்களே! பிரியப்பட்ட கேரள மக் களின் பிரதிநிதிகளே! திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த தமிழ் நாடு மக்கள் சார்பில் என்னுடைய வணக்கம்!

இந்த போராட்டத்தில் பங்கெடுக்க பினராயி விஜயன் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு, நேற்றுதான் தாயகம் திரும்பினேன். அதன் காரண மாக, என்னால் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க முடியவில்லை. எங்களு டைய கட்சியின் சார்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.பி.க்களை அனுப்பினேன்.

கேரளாவில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய உங்களை டில்லிக்கு வந்து போராட்டம் நடத்த வைத்த மிக மோசமான அரசியல் சூழலை நினைத்து வருத்தப்படுகிறேன். கருநாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவும் டெல்லிக்கு நேற்று வந்து போராட்டம் நடத்தி இருக்கிறார்.
இன்று தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிதிப்பகிர்வில் தங்களின் மாநிலத்திற்கு பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதி ராக எல்லா மாநிலங்களும் போராட் டம் நடத்துகிற சூழலுக்கு தள்ளப்பட் டுள்ளன. இதற்குக்காரணமான ஒன் றிய பா.ஜ.க. அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.

சமூக நீதி காவலர் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரிடம் ஒரு கருத்தை கூறினார்.
“தமிழ்நாட்டின் கோரிக்கைக்காக நீங்கள் ஒரு முறை கூட டில்லிக்கு வர தேவையில்லை. அப்படி ஒரு சூழ் நிலையை உருவாக்க மாட்டேன், தமிழ்நாட்டில் இருந்தபடியே சொன் னால் போதும், நிறைவேற்றி தருவேன்” என்று கூறினார். மாநிலங்களை மதிக் கிற, மாநில மக்களையும் மதிக்கின்ற வர்களாக முந்தைய பிரதமர்கள் இருந் தார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களை முனிசிபாலிட் டிகளை போல நினைக்கிறார்.
மாநிலங்கள் இருப்பதோ – மாநிலங் களுக்கு முதல்-அமைச்சர்கள் இருப் பதோ – அவருக்கு பிடிக்கவில்லை. இத் தனைக்கும் குஜராத் மாநில முதல மைச்சராக இருந்து, அதன்பிறகு பிரதமர் ஆனவர் அவர்.

ஆனால், பிரதமர் ஆனதும் அவர் செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமையை பறித்ததுதான். நிதி உரிமையை பறித்தார்; கல்வி உரிமையை பறித்தார்; மொழி உரிமையை பறித்தார்; சட்ட உரிமையை பறித்தார்.

மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்கு சமம். அதைத்தான் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பா.ஜ.க முதலமைச்சர் நினைக்க வேண்டாம்.

நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் என்று எச்சரிக்கை யாகவே சொல்ல விரும்புகிறேன். பா.ஜ.க அரசின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியோடு போராடி வருகிறது. அதே பாணியில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் போராடி வருகிறார்.

ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு பிறகு மாபெரும் நிதி நெருக்கடி பேரிடரை எல்லா மாநில அரசுகளும் சந்திக் கிறோம். அனைத்து மாநில அரசு களையும் ஒன்றிணைத்து ஆளக்கூடிய ஒன்றிய அரசு, இந்த நிதி நெருக்கடியை நீக்குகிற வகையில் செயல்பட வேண் டும். ஆனால் அப்படி செயல்படவில்லை. மாநிலங்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக கடன் வாங்குவதற்கு கூட தடையை ஏற்படுத்துகிறார்கள். மாநிலங்க ளுடைய பொதுச்செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்பு சட்டத் தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட் பட்டது. மக்களுக்கு எல்லா நன்மை களையும் செய்வது மாநில அரசுகள் தான்.

மாநில அரசிடம் தான் எல்லா அன்றாட தேவைகளையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போடு கிறது. இதை எல்லாரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாக வேண்டும்.

‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் நம் முடைய ஒற்றுமையின் மூலமாக, இந்திய அரசை கைப்பற்றி, பாசிச பா.ஜ.க.வுக்கு முற்றுப்புள்ளி வைப் போம்! அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் – சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்! பின ராயி விஜயனுக்கும் கேரள அமைச்சர் களுக்கும் வாழ்த்துகள். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும் என்று தனது உரையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *