திருநெல்வேலி மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தாக்கள் திரட்டும் பணியில் மும்முரம்!

1 Min Read

திருநெல்வேலி, நவ. 23 – தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 91-ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை சந்தாக்கள் திரட்டும்பணி திருநெல் வேலி மாவட்டத்தில் உற்சாகமாக நடைபெற்றது.

நேற்று (22.11.2023) காலை முதல் மாலை வரை திருநெல்வேலி மாவட் டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், காப்பா ளர் இரா.காசி, மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலா ளர் இரா.வேல்முருகன் மாநில மாண வர் கழக துணைச் செயலாளர் சு.இனி யன்ஆகியோருடன் தொடங்கியது.

மேனாள் சட்டப்பேரவைத் தலை வர், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் அவர்கள் ஓராண்டு சந்தா வழங்கிய துடன், பதினாறு ஒன்றிய செயலாளர் களையும் வாங்கச்செய்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலப்பாளையத்தில் மாநகரத் தலைவர் பி.இரத்தினசாமி அய்ந்து ஓராண்டு, மாவட்ட மனநல மருத்துவர் நெடுவை இரா.இராசாராம் ஓராண்டு, வள்ளியூர் நகர செயலாளர் பெ.நம்பி ராசன் ஓராண்டு, வள்ளியூர் பகுத்தறி வாளர்கழக துணைச்செயலாளர் இ.மோகனசுந்தரம் ஓராண்டு, நெல்லை பகுதி செயலாளர் சுத்தமல்லி ந.மகேசு விடுதலை, உண்மை, பெரியார்பிஞ்சு ஓராண்டு, தச்சநல்லூர் பகுதி செயலா ளர் மாரி.கணேசு ஓராண்டு, திராவிட முன்னேற்றக் கழக அறச்செம்மல் பத்த மடைந.பரமசிவம் மகன்கள் ப.இரா சேந்திரன்,ப.இளங்கோ ஓராண்டு விடு தலை சந்தாக்கள் வழங்கி மகிழ்ந்தனர். 

மாவட்டத் தலைவர் ச.இராசேந்தி ரன், மாவட்டச்செயலாளர் இரா.வேல் முருகன், வள்ளியூர் பகுத்தறிவாளர்கழக துணைத்தலைவர் சு.வெள்ளைப் பாண்டி வள்ளியூர் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ந.குணசீலன் ஆகியோர் தலா பத்து சந்தாக்கள் திரட்டித்தர உறுதியேற்றார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *