இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு மீனவர் 6 பேர் விடுவிப்பு

1 Min Read

ராமேசுவரம்,பிப்.8- ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 22ஆம் தேதி 480 விசைப் படகுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கட லுக்கு சென்றனர்.
இதில் 2 விசைப் படகு களில் அய்சக், ஈஸ்டர் ஆரோக்கியதாஸ், சிசேரியன், சமா தான பாபு, நிசாந்தன், முருகேசன் ஆகிய 6 பேர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்த 6 மீனவர் களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சிறை பிடித்து கைது செய்தனர்.
படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மீனவர் களை இலங்கையின் மன் னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட வர்களை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல் துறை நீதி மன்றத்தில் 6.1.2024 அன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது 6 மீனவர் களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தர விட்டார். மேலும் மீனவர்களின் 2 படகுகளை அரசுடமையாக்கி உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தமிழ் நாடு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *