தஞ்சை மேனாள் எம்.பி., நண்பர் பரசுராமன் மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கல்!

1 Min Read

தஞ்சை வல்லம் அருகில் உள்ள நீலகிரி பஞ்சாயத்துத் தலைவராக இருந்து, தமது இடையறாத உழைப்பின்மூலம் பல வகையில் உயர்ந்து, தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகி, பொது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவர். எவரிடமும் பண்புடனும், அன்புடனும் பழகிடும் பான்மையர் பரசுராமன் (வயது 64).
அவர் உரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் என்ற முறையில், நமக்குப் பல ஆண்டுகாலமாக அறிமுகமாகிய நண்பர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா.குணசேகரன் அவர்களுக்கு சம்பந்தி உறவுமுறை உள்ளவர்.
அவருக்கு இணையர் – விசயலட்சுமி, மகள் மருத்துவர் பல்லவி, மகன் வழக்குரைஞர் பவித்திரன் ஆகியோர் உள்ளனர்.
சில காலம் உடல்நலம் குன்றி, தேறி வந்தவர், இன்று (6.2.2024) மறைந்தார் என்று அறிந்தபொழுது, மிகவும் துயரமும், வேதனையும் அடைகிறோம்.
அவரது பிரிவினால் வருந்தி துன்புறும் அவரது குடும்பத்தினர், கொள்கை உறவுகள், அப்பகுதி மக்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
6.2.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *