புனித நகரமாக்குங்கோ!

1 Min Read

கும்பகோணத்தைப் புனித நகரமாக அறிவித்து புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும்.
– ஆளுநர் இல. கணேசன்
கும்பகோணம் மட்டுமல்ல – அனைத்து நகரங்களையும் புனித நகரமாக அல்ல – சுகாதார நகரமாக ஆக்கட்டும்!
கும்பகோணத்தைப் புனித நகரமாக ஆக்க வேண்டுமாம். 12 ஆண்டுக்கு ஒரு முறை அவ்வூரில் மகா மகம் நடக்கும். அந்தக் கோவில் குளத்தில் குளித்தால் 12 ஆண்டுகள் செய்த பாவம் ஒரே முழுக்கில் பறந்து போயோ போய் விடுமாம்!
ஒரு சேதி தெரியுமா? கடந்த முறை மகாமகம் முடிந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர், அந்தத் தண்ணீரை சென்னை கிங் இன்ஷ்டிட்யூட்டுக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தார். என்ன முடிவு (ரிசல்ட்) தெரியுமா? 28 விழுக்காடு மலக்கழிவு; 40 விழுக்காடு மூத்திரக் கழிவு! புனித நகரமாக்குங்கோ!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *