கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

6.2.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* சண்டிகர் மேயர் தேர்தல் தில்லுமுல்லு, ஜன நாயகப் படுகொலை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி: ஆதரவு 47; எதிர்ப்பு 29; பா.ஜ முயற்சி தோல்வி.
* இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பு நீக்கப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி
* தனியார் வீட்டை மறித்து கல்லை நட்டு வைத்து சாமியாக்கும் மூட நம்பிக்கை முயற்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம். உடனே அகற்றிட காவல் துறைக்கு உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என மோடி அரசு சொன்னது என்னாச்சு? பனாமா, பண்டோரா, பாரடைஸ் கசிவில் வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.
* சிபிஅய்(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், பாஜக அரசியல் ஆதாயங்களுக்காக ராமரை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
தி இந்து:
* பட்டியலின ஜாதிகளில் உள் ஒதுக்கீட்டினை மாநில அரசுகள் ஒதுக்க முடியுமா என்பது குறித்து உச்ச நீதிமன்ற ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப் பட்டது.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *