மதிமுக ஆதரவு

1 Min Read

 மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

காவிரி நீர் பிரச்னையில் வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கருநாடகம் செயல் படுகிறது. மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீரைத் திறந்துவிடாமல் தமிழ்நாட்டுக்கு எதிராக கருநாடகத்தில் நடைபெறும் போராட் டங்களுக்கு அந்த மாநில அரசே துணை போனது.

இதனால் காவிரிப் படுகை பகுதிகளில் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன.

உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என போராட்டம் நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப் புகளை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் வரும் 11-இல் முழு அடைப்புப் போராட்டம் நடை பெறவுள்ளது. இதற்கு மதிமுக முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *