வேப்பம்பட்டில் வி.விஜயலட்சுமி மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

viduthalai
1 Min Read

3.2.2024 அன்று ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர், சமூக செயற்பாட்டாளர் செ.பேரரசன்(எ)இராஜன் அவர்களின் மூத்த சகோதரி வி.விஜயலட்சுமி (வயது 63) திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் உடல் நல குறைவால் இயற்கை எய்தினார் என்பதை தெரிவித்துக் வருந்துகிறோம். தோழர் செ.இராஜன் அவர்களை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேற்று (4.2.2024) இரவு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து ஒசூர் மாவட்ட கழக தலைவர் வனவேந்தன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். தொடர்ந்து தோழர் வி.விஜயலட்சுமி அவர்களுக்கு தாம்பரம், ஆவடி மாவட்டங்களின் திராவிடர் கழகம் சார்பில் தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் மா.குணசேகரன்,தாம்பரம் மாவட்ட மேனாள் பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் பூவை.க. தமிழ்ச்செல்வன் மற்றும் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் ஆகியோர் தோழர் அவர்களுக்கு “கருப்புத் துணி போர்த்தி” வீர வணக்க முழக்கமிட்டனர்.
தொடர்புக்கு: செ.இராஜன் 9790792907.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *