கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மாமியார் பெரியார் பெருந்தொண்டர் லீலாவதி நாராயணசாமி (வயது 94) அவர்களை நேற்று (3.2.2024) வடலூரில் உள்ள அவரின் இல்லத்தில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். உடன்: மோகனா வீரமணி, கலைச்செல்வி சந்திரசேகரன், ரமா பிரபா ஜோசப், வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார், வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன், வடலூர் நகர தலைவர் புலவர் ராவணன், செயலாளர் குணசேகரன், மேனாள் ஒன்றிய தலைவர் இந்திரஜித், மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட அமைப்பாளர் மணிவேல், ஒன்றிய தலைவர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் செந்தில், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அருணாசலம், கழக ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் மற்றும் தோழர்கள்.