மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை பரப்புரை

viduthalai
1 Min Read

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் குமரிமாவட்ட திராவிடர்கழக தோழர்கள். நாகர்கோவில் வடசேரி மாநகரப் பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழகத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் பா.பொன்னுராசன், மாநகர கழக தலைவர் ச.ச. கருணாநிதி, செயலாளர் மு.இராஜ சேகர்,நாகர்கோவில் மாநகர இளைஞரணி கழக அமைப்பாளர் இரா.சந்தோஷ் குமார், தொமுச பொறுப்பாளர் கண்ணன்புதூர் வ.இளங்கோ, தோழர்கள் மு.குமரிச் செல்வர்,பொன்.பாண்டியன் உட்பட பலரும் கலந்து கொண்டனர் . தந்தை பெரியாருடைய கருத்துகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கைகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி படித்து அறிவுத் தெளிவு பெற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *