பெரியார் விடுக்கும் வினா! (1231)

viduthalai
0 Min Read

இன்று மக்களுக்கு இருக்கும் சுதந்திரத்துக்கு மேல் – மேலும் சுதந்திரம் தேவையில்லை. இருக்கிற சுதந்திரத்தையே குறைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இப்படிச் சொல்லுவது ஏன்? 21 வயதான ஆண், பெண் அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா? தற்குறிகளா? என்பது கூடப் பார்க்காமல் இவ்வளவு சுதந்திரம் அளிக்கப் பட்டு இருக்கின்றது. யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம், வெற்றி பெறலாம், பதவி அடையலாம் என்று உள்ளது. மக்களின் இந்த உரிமைகளில் சிலதையாவது குறைத்து அவர்களை அரசியலுக்குத் தகுதியுள்ளவர்களாக ஆக்க வேண்டா£?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *