குமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பாக சமூகநீதி விழிப்புணர்வு பரப்புரை குமரிமாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூர் எம்.இ.டி கல்வியல் கல்லூரியில் மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. தந்தை பெரியாருடைய பகுத்தறிவு சமூகநீதி நூல்களை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மாணவர்களுக்கு வழங்கினார். ஏராளமான மாணவர்கள் நூல்களைப் படித்து சமுகநீதி விழிப்புணர்வு பெற்றனர்.