சென்னை, பிப்.3—தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் முனை வர் கி.சீனிவாசன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யின் கூட்டம் 12.2.2024 அன்று, காலை 10.00 மணிக்கு, சென்னை – 600 009, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்.
2024-2025-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 19.2.2024 அன்று காலை 10.00 மணிக்கு பேர வைக்கு அளிக்கப்படும்.
மேலும், 2024-2025-ஆம் ஆண் டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், 2024-ஆம் ஆண்டு 20.2.2024 செவ்வாய்க்கிழமை அன் றும், 2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி), 2024-ஆம் ஆண்டு, புதன்கிழமை அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும்.
-இவ்வாறு அவர் அதில் குறிப் பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிப்.19இல் நிதிநிலை அறிக்கை தாக்கல் சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
Leave a Comment