அரசியல் லாபம் பார்க்கலாம் என்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க. திணிக்க முயற்சிக்கிறது: கே.பாலகிருஷ்ணன்

1 Min Read

சென்னை, பிப். 2- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப் பதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ள பாஜக மதவெறித் திசையில் வேகம் காட்டுகிறது. அதில் ஒன்று தான் சி.ஏ.ஏ. சட்டத்தை அமலாக்குவோம் என்ற கொக் கரிப் பாகும். நாட்டை நாசக் காடாக்கும் இந்த முயற்சிகளை சிபிஅய்(எம்) வன்மையாக கண்டிக்கிறது.

சி.ஏ.ஏ. எனப்படும் குடியு ரிமை திருத்தச் சட்டம், அகதி களுக்கு தஞ்சமளிப்பது என்ற பெயரில் வஞ்சகமாக கொண்டு வரப்பட்டது. உண்மையில் அது இசுலா மியர்களையும், இலங்கை தமிழர் களையும் ஒதுக்குவதன் மூலம் தனது நோக்கத்தை அப் பட்டமாக்கிவிட் டது. அசாம் மாநிலத்தில் நடந்தது போல சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளை உருவாக்குவதுதான் இந்த திட்டத்தின் விளைவாகும்.

அரசமைப்பு சட்டத்திற்கு நேர் விரோதமாக, குடியுரிமை யில் மதத்தை புகுத்தி அதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பிரிவினைக்கு தூபமிடலாம், வெறியை கிளப்பி மோதவிட்டு அரசியல் லாபம் பார்க்கலாம் என்றுதான், ரத்தம் குடிக்கும் இந்த திட்டத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது. நாடு முழுவதும் எழுந்த கடுமையான மக்கள் போராட்டங்களும், மாநிலங் களின் எதிர்ப்பும் கண்டு பதுங்கியிருந்த பாஜக, இப்போது மீண் டும் அதே ஆயுதத்தை தூக்கிக் கொண்டு கொக்கரிப்பது நாடாளுமன்ற தேர் தலில் வாக்குகளை பறிப்பதற்காகவே.
சி.பி.அய்(எம்) இந்த திட் டத்தை ஒருபோதும் அனுமதிக் காது, அரசி யல் களத்திலும், மக்கள் போராட்டக் களத்திலும் முன்னின்று இந்த சவாலை முறியடித்து வீழ்த்துவோம், தேச நலன் காக்க அனைவரும் கைகோர்ப்போம். -இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *