கோவில் வழிபாடு: மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் பாதிக்கும் நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்க!

viduthalai
4 Min Read

கோவில் வழிபாடு: மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் பாதிக்கும்
நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்க!
சிபிஅய் (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை

சென்னை,பிப்.1- மார்க்சிஸ்ட கம்யூ னிஸ்ட் கட்சி தமிர்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பழனி முருகன் கோவிலுக்குள் இதர மதத்தினரை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு அரசியல் கட்சி பிரமுகர் தொடர்ந்த வழக்கில், நீதிபதி சிறீமதி அவர்கள் அந்த கோவில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழு வதும் உள்ள இந்து கோவில்கள் அனைத்திற்கும் பொருந்து மாறு ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அந்த தீர்ப்பின்படி, அறநிலை யத்துறை கோவில் கொடி மரத் திற்கு அருகிலும், இதர முக்கியமான இடங்களிலும் “இந்துக்கள் அல்லா தவர்கள் கொடி மரத்திற்கு அப் பால் அனுமதிக்கப்பட மாட்டார் கள்” என விளம்பரப் பலகை வைக்க வேண்டுமென்றும், இந் துக்கள் அல்லாதோரை கோவி லுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், இந்துக்கள் அல்லாத யாரும் ஏதாவது ஒரு கோவிலுக் குள் செல்லவிரும்பினால், அவர் கள் இந்து மதத்தின் நடை முறைகளையும், பழக்க வழக் கங்களையும் பின்பற்றுவதாகவும், குறிப்பிட்ட கடவுளின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் உறுதிமொழி அளித்தால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படலாம் என்றும், அப்படி அனுமதிக்கப் படும் இந்துக்கள் அல்லாதோர் குறித்த பட்டியலை பதிவேடு களில் பராமரிக்க வேண்டு மென்றும் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், இந்த தீர்ப்பு பழனி செந்தில் ஆண்டவர் கோவிலுக்கு மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவ தும் உள்ள அறநிலையத்துறை கோவில்கள் அனைத்திற்கும் பொருந்தும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

இந்த தீர்ப்பு இறை நம்பிக் கையுள்ளவர்களை காயப்படுத் தும் தீர்ப்பாகும். தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் எல்லா மத வழி பாட்டுத் தலங்களுக்கும் சென்று வரும் வழக்கம் பல்வேறு பகுதி மக்களிடமும் நடைமுறையில் உள்ளது.

மதம் கடந்து இறை வழிபாடு செய்கிற மக்கள் ஏராளமாக உள்ளனர். அதேசமயம், பல்வேறு சமூக நிர்ப்பந்தங்கள் காரண மாகவும் பிறப்பின் அடிப்படை யிலும் தங்களை ஒரு மதத்தைச் சார்ந்தவர் என்று வெளிப்படுத்திக் கொள்வதும் நடைமுறையில் உள்ளது.
இந்து மதத்திற்கு உள்ளேயும் சைவம், வைணவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளும், வைணவத் திற்குள்ளும் வடகலை, தென் கலை போன்ற பிரிவுகளும் அதன் காரணமாக முரண்பாடுகளும், மோதல்களும் இருக்கிறது.

நாளையே ஒருவர் இது சைவ கோவில் வைணவர்கள் வரக் கூடாது என்றோ இது வைணவ கோவில் எனவே, சைவர்கள் வரக்கூடாது என்றோ நீதிமன் றத்தை நாடலாம். வைணவர் ஒருவர் வடகலைக்கு ஆதர வாகவோ, தென்கலைக்கு ஆதர வாகவோ இதர கலையை பின் பற்றுபவர் குறிப்பிட்ட கோவி லுக்குள் வரக் கூடாது, வர முடியாது என்று நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது.

இதுவெல்லாம் இந்து மதத் தின் பல்வேறு பிரிவினர்களி டையே முரண்பாட்டையும், பகைமையையும் உருவாக்குவதற் கான அடிப்படையாக அமைந்து விடும் வாய்ப்புள்ளது. அதற்கு இந்த தீர்ப்பே தீனிபோடும் விதமாக அமைந்துவிடும்.

மேலும், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் கொடிமரத்திற்கு அப்பால் போக முடியாது என் றும் வேறு சில கோவில்களிலும் அப்படி இருப்பதாகவும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது உண் மைக்கு மாறானதாக உள்ளது.

பாரம்பரிய சின்னமாக அறி விக்கப்பட்ட பிறகு அதில் இது போன்ற கட்டுப்பாடுகள் இருப்ப தற்கு வாய்ப்பில்லை. இன்று வரையிலும் தஞ்சை பிரகதீஸ் வரர் கோவிலில் எல்லா பக்தர் களும் எந்த இடம் வரை செல்ல முடியுமோ அந்த இடம் வரை செல்வதற்கு அனைத்து மதத்தி னருக்கும் அனுமதி அளிக்கப் பட்டே வருகிறது.
தொல்லியியல் துறையின் கட் டுப்பாட்டில் வராத பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு மட்டுமே அதுவும் உடை கட்டுப்பாடு மட்டுமே அமலில் உள்ளது.
தீர்ப்பில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் குறித்த இந்த அம்சம் உண்மைக்கும் மாறாக இருக்கிறது.

இந்து மத கோவில்களில் வரலாற்று காலம் தொட்டு அனைத்து மதத்தைச் சார்ந்தவர் களும் செல்வதற்கு நடைமுறை உள்ளது.
இப்போது ஏன் இந்த கட்டுப் பாடு என்ற கேள்விக்கு நியாய மான பதில் இல்லை. பிற மதங்களை சார்ந்த ஆலயங்களில் அனைத்து மதத்தினரும் சென்று வழிபடுவது காலம் காலமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கட்டுப்பாடு மக்கள் ஒற்று மையை பெரிதும் பாதிக்க கூடியதாக அமைந்து விடும்.

எனவே, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மக்களிடம் பகைமை உணர்வை விதைக்கும் வகையிலான இந்த தீர்ப்பு மறு பரிசீல னைக்கு உட்படுத்தப்பட வேண் டும்.
அரசியல் நோக்கத்திற்காக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் தன்னை அறியாமல் நீதிமன்றமும் துணை போயிருக்கிறதோ என் கிற சந்தேகம் எழுகிறது. இவற்றை யெல்லாம் கணக்கில் கொண்டு உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமென்றும், அது வரை யிலும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் இந்து சமய அறநிலையத்துறை இந்த வழக் கில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்து கிறது.
-இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *