காவிரி நீர்ப் பிரச்சினை: அனைத்துக் கட்சி தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும்: அமைச்சர் துரைமுருகன்

1 Min Read

அரசியல்

சென்னை, அக்.12 அனைத்துக் கட்சி தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும் என்றார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன்.

தமிழ்நாட்டிற்குகருநாடகா,வினா டிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில்பரிந்துரைக் கப்பட்டதையடுத்து 10 நாள்களுக் கும் மேலாக 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.ஆனால், ஆணை யத்தின் இந்த முடிவை எதிர்த்து கருநாடகாவில் பல பகுதி களில் அம்மாநில விவசாய அமைப் பினரும் கன்னட அமைப் பினரும் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், காவிரி பிரச் சினைக்காக தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு விவசா யிகளுக்கு ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு நடைபெற்றது.

இது குறித்து தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

 “காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட அனைத்துக் கட்சி தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்போம். நேற்று (11.10.2023), தஞ்சையில் விவசாயி கள் நடத்திய கடையடைப்புப் போராட்டத்தில் இருந்து அவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

இவ்வாறு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்  தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *