தமிழ்நாட்டுக்கு 3000 கனஅடி நீர் : காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை

Viduthalai
2 Min Read

பெங்களூரு, அக். 12  தமிழ்நாட்டிற்கு காவிரியில் அக்.30-ஆம் தேதி வரை விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கருநாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. 

டில்லியில் கடந்த 26ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட் டத்தில் 15 நாட்களுக்கு தமிழ் நாட்டிற்கு விநாடிக்கு 3,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கருநாடக அரசு உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான நீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூரு, மண்டியா, பெங்களூரு ஆகிய இடங்களில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பாஜக, மஜத, ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 88ஆவது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று டில்லியில் நடைபெற்றது. இதில் குழுவின் செயலாளர் டி.டி.சர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழ்நாடு அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர். கரு நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதி காரிகள் காணொலி வாயிலாக பங்கேற்ற‌னர். 

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசின்சார்பில், ” உச்சநீதிமன்றம் மற்றும்காவிரி மேலாண்மை ஆணை யத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட் டிற்கு முறையாக காவிரி நீர் திறக்கப் படவில்லை. இதனால் தமிழ்நாட்டில் நெற்பயிர்கள் கருகியுள்ளதால் விவ சாயிகள் வெகுவாக‌ பாதிக்க‌ப்பட்டுள் ளனர். எனவே நிலுவையில் உள்ள 50 டிஎம்சி நீரை திறக்க கருநாடகாவுக்கு உத்தரவிட வேண்டும். அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீரை திறக்க கருநாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்”என கோரப் பட்டது.

அதற்கு கருநாடக அரசின் தரப் பில், ”கருநாடகாவில் கடும் வறட்சி நிலவுகிற‌து. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மட்டும் 32 வட்டங்கள் வறட்சியின் பிடியில் உள்ளன. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் குறைந்த அளவிலே நீர் இருப்பில் உள்ளது. தமிழ்நாட்டின் கோரிக் கையை நிறைவேற்ற முடியாத நிலையில் கருநாடகா இருக்கிறது” என தெரிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து காவிரி ஒழுங் காற்றுக் குழு தலைவர் வினித்குப்தா, ” தமிழ்நாட்டின் நெல் சாகுபடிக்காக கருநாடக அரசு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும். அதாவது அக்டோபர் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழ்நாட்டிற்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என பரிந்துரை செய்தார். 

கருநாடகா எதிர்ப்பு: இதற்கு கரு நாடகாவில் விவசாய அமைப்பினரும், கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் எக்காரணம் கொண்டும் காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விடக் கூடாது என கருநாடக அரசை வலியுறுத்தியுள்ளனர்.  இதற்கு கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், ‘‘இந்தபரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு, அடுத்த‌ காவிரி மேலாண்மை ஆணைய கூட் டத்தில் வலியுறுத்த இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *