தருமபுரி ஒன்றிய கழக தலைவர் மா.சென்றாயனின் வாழ்விணையர் மங்கம்மாள் (வயது 74) அவர்கள் 28.1.2024 அன்று மாலை 7:30 மணியளவில் மறைவுற்றார். அவரது உடல் வெண்ணாம்பட்டி பெரியார் நகர் குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட கழக சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, கழக காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, பொதுக்குழு உறுப்பினர் க. கதிர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கதிர் செந்தில்குமார், வீ. சிவாஜி, மு. பரமசிவம், நகர தலைவர் கரு.பாலன், தொழிலாளர் அணி தலைவர் மு. சிசுபாலன்,பெ.மாணிக்கம், அரூர் கழக மாவட்ட இளைஞர் அணி தலைவர் த.மு.யாழ்திலீபன், நகர பொறுப்பாளர் ப.சி. காமராஜ், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ம.சுதா, மகளிர் அணி மாவட்ட தலைவர் நளினிக்கதிர், அம்ஜித் மற்றும் அனைத்துக் கட்சி தோழர்கள் கலந்து கொண்டு உடலுக்கு மாலை வைத்து வீர வணக்கம் முழக்கமிட்டு இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் பெருந்தொண்டர் சென்றாயன், அவரது மகன்கள் நல்லதம்பி, அறிவு, அழகு மற்றும் குடும்பத்தினருக்கு கழகத் தோழர்கள் ஆறுதல் கூறினர்.