மறைவு

1 Min Read

தருமபுரி ஒன்றிய கழக தலைவர் மா.சென்றாயனின் வாழ்விணையர் மங்கம்மாள் (வயது 74) அவர்கள் 28.1.2024 அன்று மாலை 7:30 மணியளவில் மறைவுற்றார். அவரது உடல் வெண்ணாம்பட்டி பெரியார் நகர் குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட கழக சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, கழக காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, பொதுக்குழு உறுப்பினர் க. கதிர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கதிர் செந்தில்குமார், வீ. சிவாஜி, மு. பரமசிவம், நகர தலைவர் கரு.பாலன், தொழிலாளர் அணி தலைவர் மு. சிசுபாலன்,பெ.மாணிக்கம், அரூர் கழக மாவட்ட இளைஞர் அணி தலைவர் த.மு.யாழ்திலீபன், நகர பொறுப்பாளர் ப.சி. காமராஜ், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ம.சுதா, மகளிர் அணி மாவட்ட தலைவர் நளினிக்கதிர், அம்ஜித் மற்றும் அனைத்துக் கட்சி தோழர்கள் கலந்து கொண்டு உடலுக்கு மாலை வைத்து வீர வணக்கம் முழக்கமிட்டு இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் பெருந்தொண்டர் சென்றாயன், அவரது மகன்கள் நல்லதம்பி, அறிவு, அழகு மற்றும் குடும்பத்தினருக்கு கழகத் தோழர்கள் ஆறுதல் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *