தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை அகற்றுக ஒன்றிய அரசுக்கு கடிதம் சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வ. வேலு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசு, தமிழ்நாடு

சென்னை, அக்.12 தமிழ் நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் காவிரி விவகாரத் தில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்ககோரி ஒரு மனதாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் நாள் கூட்டத்தில் 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 நேற்று (11.10.2023) நடைபெற்ற இறுதிநாள் சட்டப்பேரவை கூட்டத்தில் நடந்த கேள்வி நேரத்தில் பேசிய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜா, “புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருந்து பிருந்தாவனம், அண்ணாசாலை, டிவிஎஸ் சந்திப்பு வழியாக செல்லும் சாலை நகரின் மையப்பகுதியில் உள்ளது. 

காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தி தர வேண்டும்” என கோரிக்கை வைத்தார். 

இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தேசிய நெடுஞ்சாலை என்று சொல்லப்படும் சாலைகளில் 7 மீட்டர் மாநில சாலைகளை 10 மீட்டர் சாலைகளாக மாற்றி சுங்கச்சாவடிகளை அமைக்கிறார்கள். ஆனால் சுங்கச்சாவடிகளை அமைக்கக் கூடாது என டில்லிக்கு பலமுறை கடிதங்களை எழுதி உள்ளோம். அரசு பொறுப்பேற்ற உடன் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் 4 வழி சாலைகளாக மாற்றப்படுகின்றன.  அதில் சுங்கச்சாவடிகளை எல்லாம் அமைப்பது இல்லை. சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா சொல்லும் சாலையை ஆய்வு செய்து பணிகளை மேற்கொள்வோம் என கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *