வெள்ளி மங்கை சோனம்

1 Min Read

எகிப்தில் நடைபெறும் பன்னாட்டு துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (அய்எஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் சோனம் மஸ்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
10 மீட்டர் ஏர் ரைஃபிள் மகளிர் தனிநபர் பிரிவு இறுதிச்சுற்றில் அவர், 252.1 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தார். அவரை விட 9 புள்ளிகள் அதிகம் பெற்ற ஜெர்மனியின் அனா ஜான்சென் தங்கமும், போலந்தின் அனிடா ஸ்டான்கிவிஸ் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். சோனத்துக்கு இது முதல் உலகக் கோப்பை போட்டியாகும்.

முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்றில், சோனம் 632.7 புள்ளிகளுடன் 5-ஆம் இடமும், மற்றொரு இந்தியரான நான்சி 633.1 புள்ளிகளுடன் 4-ஆவது இடமும் பிடித்து இறுதிச்சுற்றுக்கு வந்தனர். அதில் சோனம் மட்டும் பதக்கம் வெல்ல, நான்சி 8-ஆம் இடம் பிடித்தார். இதிலேயே ஆடவர் பிரிவில் திவ்யன்ஷ் சிங் பன்வர் உலக சாதனையுடன் ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

5-ஆம் இடம்: 25 மீட்டர் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கவுர் பிரார் 5-ஆம் இடம் பிடித்தார். ரிதம் சங்வான், மானு பாக்கர் ஆகியோர் தகுதிச்சுற்றுடன் வெளியேறினர். போட்டி தொடங்கி 3 நாள்களில், பதக்கப் பட்டியலில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *