நிதிஷ்குமார் விலகியதால் ‘இந்தியா’ அணிக்கு பின்னடைவு இல்லை

1 Min Read

சென்னை, ஜன.30- நிதிஷ்குமார் விலகியதால் இந்தியா கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை என திமுக நாடா ளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித் துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி யில் காங்கிரசுக்கு தொகு திகள் ஒதுக்குவது குறித்து முதற்கட்ட பேச்சு வார்த்தை ஞாயிறன்று (28.1.2024) சென்னையில் நடைபெற்றது.
பின்னர் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசு கையில், காங்கி ரஸ் கட்சியுடன் முதற்கட்ட பேச்சு வார்த்தை முடிந்துள்ளது.

அடுத்தகட்ட பேச்சு வார்த்தை வரும் 9ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறும். பீகாரில் நிதிஷ்குமார் விலகியதால் இந்தியா கூட்டணிக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. இந்தியா கூட்டணிக்கு நிதிஷ்குமார் கூறிய திட்டங்கள் ஒன்றுமே இல்லை, ஹிந்தியில் பேச வேண்டும் என்று மட்டுமே நிதிஷ் குமார் கூறினார். அப்போது கூட கூட்டணிக்காக அமைதியாக இருந்தோம்.
பிரதமராக வேண்டும் என்று நிதிஷ்குமார் தெரிவிக்க வில்லை. எல்லா கட்சியும் அதிகமான இடங்களில் நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். திமுக கூட 40க்கு 40 தொகுதிகளும் நிற்க வேண்டும் என்று தான் நினைக் கிறோம். கூட்டணி என்று வந்தால் தொகுதிகளை பிரித்து தான் போட்டியிட வேண்டும்.
இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *