செய்திச் சுருக்கம்

0 Min Read

இதயம் காப்போம்
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட அரசின் ‘இதயம் காப்போம்’ திட்டம் மூலம் இதுவரை 5,531 நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.

அதிகரிப்பு
தமிழ்நாடு அரசின் இறுதி மரியாதை அறிவிப்புக்கு பிறகு தமிழ்நாட்டில் உடல் உறுப்புக் கொடை செய்வோர் எண்ணிக்கை 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

பாலியல்…
இந்தியாவில் 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் 96 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை அதிர்ச் சித் தகவலை வெளியிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *