பொற்பனை கோட்டை அகழ்வாராய்ச்சி முதற்கட்ட ஆய்வு நிறைவு

2 Min Read

புதுக்கோட்டை,ஜன.28- புதுக் கோட்டை மாவட்டம் பொற் பனைக் கோட்டையில் நடை பெற்று வந்த முதல்கட்ட அக ழாய்வுப் பணி முடிவுற்றது. அடுத்த கட்ட அகழாய்வு அரசின் அனு மதிக்குப் பிறகு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்ககாலப் பகுதியாக விளங் கும் பொற்பனைக் கோட்டையில் தொல்லியல் துறையின் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் அகழாய்வுப் பணி நடைபெற்று வந்தது.

அரண்மனைத் திடல் என்று அழைக்கப்படும் கோட்டையின் மய்யத்திலும், கோட்டைச் சுவரின் வடக்குப் பகுதியிலும் 15 அடி நீளம், அகலத்தில் 15-க்கும் மேற் பட்ட இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.
அகழாய்வுப் பணிக்கான இயக் குநர் தங்கதுரை தலைமையிலான பணியாளர்கள் அகழாய்வில் ஈடு பட்டு வந்தனர். இதில், செங்கல் கட்டுமானம், பானை ஓடுகள், வட்ட வடிவிலான சுவர், கண் ணாடி மணிகள், வட்ட சில்லுகள், பச்சைக் கல் மணிகள், படிகக் கல் மணிகள், தங்க மூக்குத்தி, சுடுமண் விளக்கு, தக்களிகள், எலும்பு முனைக் கருவி, கெண்டி மூக்குகள், மெருகேற்றும் கற்கள், பெரில் மணிகள், மனைக் கல், முக்கோண வடிவ செங்கற் கட்டி, இரும்பு பொருட்கள், மஞ்சள் கல் மணி உள்ளிட்ட பொருட்கள் கிடைத் துள்ளன.

மேலும், மெருகேற்றப்பட்ட பீங்கான் ஓடுகள், கூரை ஓடு கள்,துளையிடப்பட்ட பானை ஓடுகள், மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ரவுலட் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

கோட்டைச் சுவரானது செங் கல் கட்டுமானத்தில் கட்டப்பட்ட தும் ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது.
இந்நிலையில், முதல்கட்ட அக ழாய்வு முடிவுற்றது. சேகரிக்கப் பட்ட பொருட்களை ஆவணப் படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அடுத்தகட்ட அகழாய்வுப் பணி, அரசின் அனுமதிக்குப் பின்னரே நடைபெறும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறு கின்றனர்.
இதுகுறித்து தொல்லியல்துறை அலுவலர்கள் கூறும்போது, “பொற்பனைக்கோட்டையுடன் சேர்த்து மொத்தம் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்வதற்கு அரசு அனுமதி அளித்தது. பொற் பனைக்கோட்டையில் தற்போது முதல்கட்ட அகழாய்வுப் பணி முடிவடைந்துள்ளது.
அகழாய்வின்போது ஏராள மான தொல்பொருட்கள் கிடைத் துள்ளன.

அகழாய்வுக்காக தோண்டப் பட்ட குழிகளில் சில குழிகள் மட்டுமே மண்ணிட்டு மூடப் பட்டுள்ளன. கட்டுமானங்கள், தொல்பொருட்கள் கிடைத்துள்ள சில குழிகள் தார்ப்பாய் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் படும். அதன் பின்னர் அரசு அனுமதி அளிக்கும்போது, அடுத்த கட்ட அகழாய்வு தொடங்கும்” என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *