கட­லூர் மருத்­து­வர் வெ.நமச்­சி­வா­யம் மறைவு குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல்

1 Min Read

கட­லூர், ஜன.28- சிதம்­ப­ரம் ரிஜிஸ்ட்­ரார் சு.பூவ­ரா­கன் அவர்­க­ளின் பேத்தி பூங்­கொ­டி­யின் கண­வ­ரும், நிலவு பூ. கணே­ச­னின் மூத்த மரு­ம­க­னு­மான கட­லூர் குழந்தைகள் மருத்­துவ நிபு­ணர் வெ.நமச்­சி­வா­யம் (வயது 81) அவர்­கள் நேற்று (27.1.2024) பிற்­ப­கல் 3.00 மணி­ய­ள­வில்இயற்கை எய்­தி­னார் என்­பதை அறி ­விக்க வருந்­து­கி­றோம்.

சுய­ம­ரி­யாதை இயக்­கக் குடும்­பத்­தில், நிலவு. பூ.கணே­ச­னின் மூத்த மகள் பூங்­கொடி- மருத்­து­வர் வெ.நமச்­சி­வா­யம் இணை­ய­ரின் திரு­ம­ணம் நாவ­லர் தலை­மை­யில் கட­லூ­ரில் நடை­பெற்றது.

கட­லூர் மாந­க­ரில் குழந்­தை­க­ளுக்­கான சிறப்பு மருத்­து­வ­ரா­கத் திகழ்ந்து மிக­வும் பிர­ப­ல­மா­ன­வர். சேவை மனப்­பான்­மை­யு­ட­னும், பகுத்­த­றி­வுக் கொள்­கை­யு­ட­னும், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், இன­மா­னப் பேரா­சி­ரி­யர், ஆசி­ரி­யர் கி.வீர­மணி மற்­றும் திரா­விட இயக்­கத் தலை­வர்­க­ளு­டன் கொள்கை வழி உற­வி­ன­ரா­கத் திகழ்ந்­த­வர் மருத்­து­வர் வெ.நமச்­சி­வா­யம் ஆவார்.

இவ­ருக்கு மருத்­து­வர் ந.பூங்­கு­ழலி கோபி­நாத் என்ற மக­ளும், மருத்­து­வர் ந.பூங்­குன்­றம் என்ற மக­ளும் உள்­ள­னர்.
செய்­தி­ய­றிந்து கழக நிர்­வா­கி­க­ளும், திரா­விட இயக்­கச் சிந்­த­னை­யா­ளர்­க­ளும், பொது­மக்­க­ளும் திர­ ளா­கச் சென்று மரியாதை அஞ்­சலி செலுத்­தி­னர்.
அவ­ரது இறுதி ஊர்­வ­லம் நாளை (29.1.2024)காலை 10 மணி­ய­ள­வில் ரங்­க­நா­தன் நகர் கடற்­க­ரைச் சாலை, கட­லூர் எனும் முக­வ­ரி­யில் உள்ள அவ­ரது இல்­லத்­தி­லி­ருந்து புறப்­பட்டு அங்­குள்ள இடு­காட்­டில் நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­டு­கி­றது.

மருத்துவர் வெ.நமச் சிவாயம் மறைவையொட்டி, அவர்தம் குடும்பத்தினரு டன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித் தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *