தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு உறுப்பினர்கள் நியமனம் எப்போது? ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Viduthalai
1 Min Read

சென்னை,அக்.13- சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்குரைஞரான கே.பாலு தாக்கல் செய்த மனு வில், “தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப் பினர்கள் பதவிகள் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியி லிருந்து காலியாக உள்ளன. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. எனவே, ஆணையத் துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசுத் தரப்பில், தேசிய பிற்படுத்தப்பட் டோர் நல ஆணையத்துக்கு கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைவர் நியமிக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட்டார், என தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ஆணையத்தில் எத்தனை பேர் இடம் பெற்றிருக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் அய்ந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டது. 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆணையத் துக்கு அனுமதிக்கப்பட்ட உறுப் பினர்கள் எப்போது நியமிக்கப்படு வர் என கேள்வி எழுப்பி, இது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம் பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *