வேலூர் அரசு மருத்துவமனையில் மாரடைப்பு நோய் தடுப்பு சிகிச்சை பயிற்சி

1 Min Read

அரசியல்

வேலூர், அக். 13- 11.10.2023 அன்று காலை 11:00 மணியளவில் அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய பிரிவு சார்பில் “மாரடைப்பு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளுக்கான பயிற்சி அளித்தல்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் மருத்துவர் எஸ். பாப்பாத்தி அவர்கள் தொடங்கி வைத்து, அவர் கூறுகையில்:-

வேலூர், இராணிப் பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசு மருத்துவ மனை மருத்துவர்களுக் கும், செவிலியர் மற்றும் 108 அவசர சிகிச்சை நுட்பனர்கள் ஆகியோருக்கு சிறப்பு பயிலரங்கம் நடை பெற்றது.

மாரடைப்பு நோயைப் பொறுத்தவரை நேரம் மிக முக்கியமானது என்றும் அதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்கலாம் என்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றி விரிவாகப் பேசினர்.

இந்த பயிற்சி முகாமில் மாரடைப்பு நோயை துரி தமாக, திட்டவட்டமாக கண்டறியும் முறைகளும், அவற்றிற்கான சிகிச்சை முறைகளும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நம் மருத்துவக் கல்லூரி இதய நோய் பிரிவை யும் மற்றும் மாவட்டத்திலுள்ள பிற மருத்துவம னைகளையும் ஒருங்கி ணைத்து மாரடைப்பு நோய்க்கு உடனடியாக விரைவாக செயல்பட்டு சிகிச்சை அளிப்பது குறித்து இதய பிரிவு துறைத் தலைவர் மருத்துவர் க.சபாபதி மற்றும் இதய நோய் பிரிவு மருத்துவர்கள் மருத்துவர் சபாஷ் சந்திர போஸ், மருத்துவர் இம்ரான் தியாசி ஆகியோர் இதய நோய்க்கு சிகிச்சை முறைகளை விரிவாக எடுத்துரைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *