காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனை இன்றி வீட்டிலேயே சிகிச்சை வேண்டாம்

1 Min Read
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்
சென்னை, ஜன.26 காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனை பெறாமல் வீட்டி லேயே சிகிச்சை எடுத்துக் கொள் ளக் கூடாது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் அறிவுறுத்தியுள்ளார்.
திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புநிதி உதவியின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பில் கண் அறுவை சிகிச்சை அரங்கத்தையும், எச்பிசிஎல் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.20லட்சம் மதிப் பில் மருத்துவ உபகரணங்களையும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (25.1.2024) தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருவொற்றியூர் பகுதி மக்கள்கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வசதியாக இந்த மருத்து வமனையில் புதிய கட்ட மைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும் பணியில் உள்ள னர்.
காலிபணியிடங்கள் இல்லை. இருப்பினும், பொதுமக்களின் நலனைக்கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் கூடுதலான மருத் துவர்கள் இங்கு நியமிக்கப்படு வார்கள். அதன்மூலம் 24 மணி நேரமும் இங்கு சிகிச்சை பெறுவ தற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
உயிரிழப்பு அபாயம்: தமிழ் நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. இறப்பு களைப் பொறுத்தவரை மிகவும் குறைவு. குழந்தைகளுக்கு காய்ச் சல் பாதிப்பு ஏற்படும்போது, மருத்துவ மனைக்கு வராமல், மருத்துவ ஆலோசனை பெறாமல் வீட்டி லேயே சிகிச்சை பெறுவதால்தான் இறப்புகள் ஏற்படும் சூழல் நிலவு கிறது. எனவே, குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவ ஆலோசனை பெறாமல் வீடுகளில் சிகிச்சை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *