கருத்தரங்கம்

1 Min Read

‘சிந்து சமவெளி நாகரிகம் – ஓர் அறிமுகம்’ – கருத்தரங்கம்

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “சிந்து சமவெளி நாகரிகத் தொல்லியல் களங்களில் தடயவியல் ஆய்வுகள்” எனும் தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவினை தென் கொரியா நாட்டின் கொரியா பல்கலைக் கழக தொல்லியல் பேராசிரியர் முனைவர் கிம்யோங்ஜூன் ஆற்றினார். தொல்லியலாளர் முனைவர் ச. தீபிகா, ‘சிந்து சமவெளி நாகரிகம் – ஓர் அறிமுகம்’ எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். சிறப்புச் சொற்பொழிவாளர் கிம்யோங்ஜூன் அவர்களுக்கு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் முனைவர் பெ. ஜெகதீசன் பயனாடை அணிவித்திட, செயலாளர் பேராசிரியர் அ. கருணானந்தன் ‘பெரியார் சிந்தனை பற்றிய ஆங்கிலப் புத்தகத்தினை நினைவுப் பரிசாக வழங்கினார். உடன்: மய்யத்தின் இணைச் செயலாளர்கள் முனைவர் ஆர். சரவணன், முனைவர் ரஷீத்கான், பொருளாளர் வீ. குமரேசன் இருந்தனர். (சென்னை பெரியார் திடல் – 24-1-2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *