தமிழ்நாடு – புதுச்சேரியில் “இந்தியா” கூட்டணி மு.க.ஸ்டாலின் வழி நடத்துவார்!

2 Min Read

தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் பேட்டி

சென்னை,ஜன.22- தமிழ்நாடு காங் கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் அளித்த பேட்டி யில் இந்தியா கூட்டணியின் வலி மையான தலைவராக மு.க.ஸ்டா லின் திகழ்கிறார் என்றும், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணியை மு.க.ஸ்டா லின் வழிநடத்துவார் என்றும் தெரிவித்து உள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவ னில், தமிழ்நாடு காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி தலைமையில், தமிழ்நாடு காங்கிரசின் புதிய மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் முன்னிலையில் மாநில தேர்தல் குழு கூட்டம் (20.1.2024) அன்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னதாக அஜோய் குமார் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:
தி.மு.க. – காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் எங்கள் கூட் டணி வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலிமையான தலைவராக இருக்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணியை மு.க.ஸ்டாலின் வழி நடத்துவார்.

தொகுதிப் பங்கீடு
நாடாளுமன்றத் தேர்தலுக் கான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை குழுவை தி.மு.க. அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு இன்னும் 2 தினங்களில் அறிவிக்கப்படும்.
பா.ஜனதா அரசு ராமரின் பெய ரால் கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகிறது. இதன் மூலம் பா.ஜனதா தலைவர்கள் சொத்துக்களை குவித்து வருகின் றனர். அதே நேரத்தில் நெல்லை மற்றும் சென்னை வெள்ள பாதிப்பு களுக்காக தமிழ்நாடு அரசு நிவா ரணத் தொகையாக கேட்கும் ரூ.38 ஆயிரம் கோடியை வழங்கவில்லை. பிரதமரின் ஏமாற்று வேலையை தமிழ்நாடு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முடியாத மோடியால், சிறீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய மட்டும் முடிகிறது. தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள். எனவே, காங்கிரஸ்-தி.மு.க. கூட் டணி தமிழ்நாட்டில் 39 இடங் களையும் கைப்பற்றும்.இவ்வாறு அவர் கூறினார். அதைத் தொடர்ந்து கே.எஸ்.அழ கிரி கூறும்போது, ”பா.ஜனதாவால் தமிழ்நாட்டில் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. பிரதமர் மோடி யும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் இருக்கும் வரை எங்களுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *