அறிஞர் அண்ணா பிறந்த நாள் மேலும் 9 ஆயுள்சிறைக் கைதிகள் விடுதலை

1 Min Read

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை,அக்.14- ஆயுள் சிறை கைதிகள் மேலும் 9 பேரை விடுதலை செய்து தமிழ்நாடு அரசு அறிவித்திருக் கிறது. பணகுடியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டிக் கப்பட்டவர்கள் விடுதலை செய்யப் பட்டு இருக்கிறார்கள். அறிஞர் அண் ணாவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி கொண் டாடப்பட்டு வருகிறது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரக்கூடிய கைதிக ளில் நன்னடத்தையோடு இருக்கும் கைதி களை தேர்வு செய்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் பாளை யங்கோட்டை சிறையில் இருக்கும் 9 ஆயுள் சிறை கைதிகளையே விடுதலை செய்வதாக சிறை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 113ஆவது அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த முன்விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுள் சிறை கைதிகள் 9 பேரும் பணகுடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு நெல்லை அமர்வு நீதிமன்றத்தால் 1999இல் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எனவே இவர்களை அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி விடு தலை செய்துள்ளது. இதுவரை 344 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ள தாகவும் சிறைத்துறை தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *