அமெரிக்காவில் ரூ.41,000 கோடி கல்விக் கடனை ரத்து செய்தார் ஜோ பைடன்

1 Min Read

வாசிங்டன், ஜன.21 அமெரிக்காவில் கல்விக்கடன் வாங்கிய பலரும் அதனை திருப்பிச் செலுத்த முடி யாமல் அவதிப்பட்டனர். எனவே இந்த கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி அதிபர் ஜோ பைடன் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடனை ரத்து செய்வதாக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார்.
இந்தநிலையில் சுமார் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.41 ஆயிரம் கோடி) கல்விக்கடனை ரத்து செய்வதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் 74 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர்.
இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தற்போது ஆசிரியர், செவிலியர்கள் என அரசு ஊழியர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *