பல்லாவரம் வாலிபர் சங்கம் ஜாதி இந்து செய்கைக்குக் கண்டனம்

1 Min Read

மேற்படி சங்கக் கமிட்டி கூட்டம் 26.4.1936 ஞாயிற்றுக் கிழமை சங்கத் தலைவர் எம்.தர்மலிங்கம் தலைமையில், கூடியது. அப்போது கீழக்கண்ட தீர்மானங்கள் நிறை வேறின:-
1. பொது நலப் பிரியரும், சமதர்மவாதியுமான வாலிப வீரர் தோழர் டி.வி.சுப்ரமணியம் தம் 38 ஆம் வயதில் அகால மரணம் அடைந்ததை முன்னிட்டு இக்கூட்டம் வருந்துவதுடன், மேற்படியார் குடும்பத்திற்கு அனுதாபத் தையும் தெரிவித்துக் கொள்கிறது.
2. இச்சங்கத்தின் மெம்பர் கிறிஸ்தவ ஆதித்திராவிடத் தோழர் ஏ. அந்தோணி ராஜ் 24.4.1936 வெள்ளிக்கிழமை வழக்கம்போல், பல்லாவரம் – மாங்காளியம்மன் கோவில் தெருவில் அக்கிரகாரத்தில் வசிக்கும் ஒரு பிராமண உபாத் தியாயரிடம் பாடம் கற்றுக் கொண்டிருக்கும் பொழுது, அதே வீதியில் உள்ள ஒரு பார்ப்பனர், பறையன் அக்ர காரத்தில் ஏன் வந்தானென்று மேற்படி ராஜுவை செருப் பால் தாக்கியதாகக் கேள்விப்பட்டு இக்கூட்டம் மேற்படி பார்ப்பனரின் அடாத செயலை வன்மையாகக் கண்டிப்ப துடன் போலீஸ் அதிகாரிகளும் கவர்மெண்டாரும் இது விஷயம் குறித்து நடவடிக்கைகள் எடுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறது.
3. மே தினத்தை இச்சங்க ஆதரவில் கொண்டாட வேண்டுமென்று தீர்மானிக்கிறது.
– ‘விடுதலை’ – 29.4.1936

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *