தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவை ஜனவரி 23இல் கூடுகிறது

2 Min Read

சென்னை, ஜன. 20- சட்டப்பேரவை கூட்டத் தொடர், பட்ஜெட் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் வரும் ஜன.23ஆ-ம் தேதி அமைச் சரவைக் கூட்டம் நடக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரை யுடன் இம்மாதம் 3ஆ-வது வாரத்தில் நடைபெறலாம் என கூறப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்ஜாம் புயல், டிச 17, 18 தேதிகளில் அதிகனமழை, வெள்ளம் இவற்றின் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழல், அதற்கான நிவாரணம் வழங்குதல், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குதல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற் றும் ஆளுநருடனான கருத்துமோதல் உள் ளிட்ட காரணங்களால் பேரவைக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.
இதற்கிடையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜன.28ஆ-ம் தேதி ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு முத லீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேற் கொள்கிறார். தொடர்ந்து பிப்ரவரி முதல் வார இறுதியில் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பிப்ரவரி 2ஆ-வது வாரத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் ஒன்றிய அர சின் பட்ஜெட் வரும் பிப்.1ஆ-ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், விரை வாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிப் பும் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

எனவே, தமிழ்நாடு அரசும் தனது 2024-2025ஆம் ஆண்டுக்கான பட் ஜெட்டை பிப்ரவரி மாதமே தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்த சூழலில்தான், வரும் ஜன.23ஆ-ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத் தில் முதலமைச்சரின் வெளிநாட்டுப்பயணம் தொடர்பாக விவாதித்து அமைச்சர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஆளுநர் உரை இறுதி செய்யப்பட உள்ளது.இதுதவிர, ஆளுநர் -அரசு இடையில் நிலவும் பனிப்போர் தற் போதும் தொடரும் நிலையில், இந்த கூட்டத்தொடரில் ஆளுநரை அழைப் பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப் பட வாய்ப்புள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஆதாரம் குறித்தும் இந்த கூட்டத் தில் விவாதிக்கப்பட உள்ளது. முதல மைச்சர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு பயணம் செல்ல உள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களுக்கான ஒப்புதல், ஏற் கெனவே தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்கான சலு கைகள் வழங்குவதற்கான ஒப்புதல் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக் கப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *