செய்திச் சுருக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

முதலீடுகள்
குறு, சிறு, தொழில் துறையில் தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.63,000 கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். 5.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று இத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு
நெய்வேலியில் என்.எல்.சி. சுரங்கப் பணிக்காக வீடு நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரில் 229 பேருக்கு என்எல்சி நிர்வாகம் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது.

பரிந்துரை
தமிழ்நாட்டிற்கு காவிரியில் பிப்ரவரி மாதத்திற்குள் 4 டிஎம்சி நீரை திறந்து விடுமாறு கருநாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிதுரை செய்து உள்ளது.

ஆதாரம்
பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அட்டை இனி ஏற்றுக் கொள்ளப் படாது என பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் (இபிஎஃப்ஓ) தெரிவித்து உள்ளது.

கரோனா
தமிழ்நாட்டில் நேற்று 151 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், சென்னை, செங்கல் பட்டு, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திரு வள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங் களின் தலா ஒருவருக்கு என தமிழ் நாட்டில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அழைப்பு
ஊழலின் தீமைகளை பற்றி விளக்க வும், அதை ஒடுக்குவதற்கான சட்டரீதி யான வழிமுறைகளை அறிந்து கொள்ள செய்யவும் பயிற்சியாளர்களுக்கு ‘லோக பாக்’ அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

மீனவர்களுக்கு…
பேரிடர் காலங்களில் கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும் மய்யம் பெங் களூருவில் திறக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *