கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

19.1.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ மக்களிடையே வெறுப்பை பரப்புதல், அவர்களின் பணத்தை கொள்ளையடித்தல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் ஊழல் மிகுந்த மாநிலமாக பாஜ ஆளும் அசாம் இருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

டெக்கான் கிரானிக்கல் சென்னை:
♦ ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள் ளன. மாநிலங்களுக்கு எதிராக மலிவான-தரம் தாழ்ந்த அரசியல் அவலம் உயர்ந்த பொறுப்புக்கு சிறிதும் தகுதி யில்லாத ஆளுநர்கள்: ஜனநாயக வழியில் முறியடிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ அரசு மற்றும் பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி பெறுவதற்கு முன்பே தனியார்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளத் தூண்டியது என்ன காரணம் என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதனிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

தி இந்து:
♦ 2024-2023 வரையிலான ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் 24.82 கோடி மக்கள் “பல்பரிமாண வறுமையிலிருந்து” வெளியேறிவிட்டனர் என்று கூறும் நிட்டி ஆயோக் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் அன்று கேள்வி எழுப்பியது. கடந்த நிதியாண்டில் 7.1% ஆக இருந்த நுகர்வு வளர்ச்சி இந்த நிதியாண்டில் 4.4% ஆக குறைந்துள்ளது. 80 கோடி குடிமக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் நலன்களை குறைப்பதை இலக்காகக் கொண்டு இந்த அறிக்கை உள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
♦ 2014இல் ஆட்சிக்கு வந்த உடனேயே, நரேந்திர மோடி அரசு, மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கணிச மாகக் குறைக்க முயன்றதாக
♦ நிட்டி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி. ஆர். சுப்ரமணியத்தின் கருத்துக்கு, மோடி அரசு “அனைத் தையும் ஒன்றியமயமாக்கல், முழுமையான கட்டுப்பாடு மற்றும் இந்தியாவின் கூட்டாட்சியை சிதைக்கிறது” என்று காங்கிரஸ் கண்டனம்.

தி டெலிகிராப்:
♦ பெங்களூர் இந்திய மேலாண்மைக் கழக ஆசிரியர் பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினர் புறக்கணிப்பு – தவறான காரணங்களைக் கூறி தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக விண்ணப்பித்த இருவர் புகார்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *