தமிழ்நாட்டில் 40 சதவீதத்தினருக்கு சர்க்கரை நோய்

1 Min Read

சென்னை, ஜன.19 தமிழ் நாட்டில் 5 மாவட்டங்களில் 400 பேரிடம் பரி சோதனை செய்த தில், 40 சதவீதத்தின ருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகா தாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறிய தாவது:
சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, கன் னியாகுமரி, தருமபுரி மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்டவர்களின் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவை பரிசோதனை செய்ததில் அதில், 40 சதவீதம் பேருக்கு புதிதாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள், தங்களுக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதை அறியாமல் இருப்பதையே இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
அறிகுறிகள் ஏதும் இல்லாமல் உள்ள சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்தை முறையாகக் கவனிக்காவிட்டால் அது உடல் உறுப்புகளை பாதிப்பதுடன் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும். 30 வயதுக்கு மேற்பட்ட வர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்த சர்க்கரை அளவையும், உயர் ரத்த அழுத்தத்தையும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனை களிலும் பரிசோதனைகள் கட்டணமின்றி செய்யப்படு கின்றன. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *