கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

15.10.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉 மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் அமல்படுத்தும்: 9 ஆண்டு கால மோடி அரசு பெண்கள் நலனை சீரழித்தது; திமுக மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு

தி டெலிகிராப்:

👉  மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங் களில் 145 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சரண் சிங் சப்ரா பேச்சு.

👉  அக்டோபர் 24க்குள் மராட்டியர்களுக்கு ஒதுக் கீட்டை அறிவிக்காவிடில், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக மனோஜ் ஜாரங்கே மிரட்டல்.

👉  ஜாதிவாரி – கணக்கெடுப்பை மோடி அரசு நடத்த வேண்டும். இல்லையெனில் மேற்கு வங்க அரசு 

மாநிலத்தில் சர்வே எடுக்க வேண்டும் என வங்காளத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பு களின் பிரதிநிதிகள் கோரிக்கை.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉 எம்.பி.பி.எஸ். சேர்க்கை: 80க்கும் மேற்பட்ட காலி இடங்களை மாநில ஒதுக்கீட்டில் ஒப்படைக்குமாறு மோடி அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *