மாட்டுப் பண்ணை கழிவு நீரால் கல்லூரி மாணவிகள் அவதி! சென்னை மாநகராட்சி நோட்டீஸ்!

1 Min Read

சென்னை, ஜன, 19 சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை – அறிவியல் கல்லூரியின் வளாக வெளிப்புறத்தில், திருமதி பி. கீதா மற்றும் சிலரால் மாட்டுப் பண்ணை ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது கல்லூரியில் உள்ள கிணற்றில் கலப்பதால், கல்லூரி மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். மாட்டுப் பண்ணையின் கழிவுநீர் சட்டவிரோதமாக அடையாறு ஆற்றில் நேரடியாக விடப்படுகிறது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில், பெருநகர சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டல நல அலுவலர், மாட்டுப் பண்ணை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், மாட்டுப் பண்ணை அமைப்பதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், கழிவு நீரை சுகாதார முறையில் வெளியேற்றவும், கழிவுகளை சுகாதார பாதிப்பின்றி அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *