பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

1 Min Read

கோவை, நவ.24  நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழையின் காரணமாக, 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் நேற்று (23.11.2023) ஒரே நாளில் 12 அடி அதிகரித்து, 89 அடியாக உயர்ந்தது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணை, காரமடை அருகே நீலகிரி மலை யடிவாரத்தில் அமைந்துள்ளது. தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து நேற்று அதி கரித்தது. 23.11.2023 அன்று இரவு கொட்டித் தீர்த்த கன மழையால், பில்லூர் அணையின் நீர்மட்டம் 77 அடியில் இருந்து 89 அடியாக உயர்ந் தது. ஒரே நாளில் 12 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணையில் இருந்து மின் உற்பத்தி செய்ய விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பவானியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் பொது மக்கள் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என வருவாய்த் துறை யினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *