செய்தியும், சிந்தனையும்….!

1 Min Read

புத்துயிர் ஊட்டுகின்றீர்களா?
* ராமரை வைத்துப் பா.ஜ.க.வை அரசியல் செய்யவிடக் கூடாது – கி.வீரமணி பஞ்ச். அதுதானே ராமரை வைத்து நீங்கள்தானே அரசியல் செய்வீங்க.
– ‘இந்து தமிழ்திசை’ கேலி
>> கற்பனைக் கடவுள்களை வைத்து அரசியல் செய்தால் அதை விமர்சிப்பது அரசியலா? அதுதான் அரசியல் என்றால், அதை செய்வதுதான் வீரமணி யின் பணி. ஆமாம், ராமன்தான் சிராயு நதியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டானே, அதற்குப் புத்துயிர் ஊட்டுகின்றீர்களா?
மறுநாள் திறக்கப்படும்!
* ராமன் கோவில் திறப்பன்று மதுபானக் கடைகள் மூடப்படும்.
>> மறுநாள் திறக்கப்படும்!
பட்டியலில் இல்லாதவர்!
* ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி பங்கேற்பு.
>> இவர்தான் சங்கராச்சாரியார் பட்டியலிலேயே இடம்பெறாதவர் ஆயிற்றே; காஞ்சி மடம் என்ற ஒன்றே கிடையாதே! இவர் அயோத்திக்குப் போனால் என்ன? போகாவிட்டால்தான் என்ன?
இதுவும் ‘ஜூம்லா’தானோ!
* கடந்த 9 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்பு.
– பிரதமர் நரேந்திர மோடி
>> இதுவும் ‘ஜூம்லா’தானோ!
இப்பொழுது புரிகிறதா?
* பிரதமர் மோடி தமிழ்நாட்டில் சிறீரங்கம், ராமேசுவரம், தனுஷ்கோடியில் கோவில் தரிசனம்.
>> சங் பரிவார்கள் காவி உடை அணிவது ஏன் என்பது இப்பொழுது புரிகிறதா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *