மதுரை சொக்கலிங்க நகரில் கழகக் கொடி ஏற்றம்

viduthalai
1 Min Read

மதுரை, ஜன.18- மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக (17-01-2024) புதன்கிழமை காலை 10 மணிக்கு சுயமரியாதைச் சுடரொளி சோ.இராமமூர்த்தி நினைவாக சொக்கலிங்க நகரில் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் கொடி ஏற்றினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் நேரு சிறப்பரையாற்றினார்.

அய்யா. ராமமூர்த்தியின் துணை வியார் முத்துராணி, அண்ணன் ராமமூர்த்தி போல தானும் அய்யா வின் பணியினை ஆசிரியர் வழியில் தொடர்ந்து செய்ய தயாராக இருப்பதாகவும் கழக தோழர் களிடம் கூறி நன்றியுரையாற்றினார். லதா-ரவி, பெரியார் பிஞ்சுகள் நந்தினி, விஷ்ணுவர்தினி, தமிழ் குமார், மதுரை 69ஆவது வார்டு பகுதி சிபிஎம் தோழர் ராஜேந்திரன், பாலு, புகழேந்தி, ஆட்டோ ஓட்டுநர் பாண்டி, இளைஞரணி செயலாளர் க.சிவா, தோழர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *