மந்திரமா? தந்திரமா? பயிற்சிப்பட்டறை

1 Min Read

ஜனவரி 20, 21 (சனி, ஞாயிறு)
திருச்சி சுந்தர் நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில்
திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம்
இணைந்து நடத்தும்
மந்திரமா? தந்திரமா? பயிற்சிப்பட்டறை

திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்டத்தலைவர்கள் செயலாளர்கள், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு அன்பு வேண்டுகோள்

மக்களை மடமையாக்கும் மாந்திரீகம், ஜோசியம், ஜாதகம் சாமியார்களின் மோசடிகளை முறியடித்து மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு பிரச்சாரத்தில் முதன்மையானது மந்திரமா? தந்திரமா? கலை நிகழ்ச்சி.
மந்திரமா? தந்திரமா? கலை நிகழ்ச்சியாளர்களை நாடு முழுவதும் பரவலாக உருவாக்கிட வேண்டும் என தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் அறிவுறுத்தலுக்கு இணங்க திருச்சி, சுந்தர் நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில்; 2024 ஜனவரி 20, 21 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் மந்திரமா? தந்திரமா? பயிற்சிப்பட்டறை நடைபெற வுள்ளது.
அகில இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு தலைவர் மானமிகு நரேந்திரநாயக் இருநாட்களும் கலந்துகொண்டு பயிற்சி அளிக்க உள்ளார்கள்.
ஆர்வமுள்ள இருபால் கழகத்தோழர்களை பயிற்சிப் பட்டறைக்கு அனுப்பி வைக்குமாறு திரா விடர் கழக, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.
முன்பதிவு:
19.01.2024ஆம் தேதிக்குள்
முன்பதிவு செய்திட வேண்டுகிறோம்.
கட்டணம்: ரூ. 300/-
குறிப்பு: தற்போது உள்ள மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர்கள் அனைவரும் இருநாட்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.
இவண்: அண்ணா.சரவணன் – 9443510466
முனைவர் மு.சு.கண்மணி – 9842489040
வி.இளவரசி சங்கர் – 9952188824
மாநில துணைப் பொதுச்செயலாளர்கள்
பகுத்தறிவு பயிற்சிப் பட்டடறைப் பொறுப்பாளர்கள்
பகுத்தறிவாளர் கழகம்.
இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சிப்பட்டறை பொறுப்பாளர்
திராவிடர் கழகம்
தொடர்புக்கு : 98425 98743

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *