“தமிழும் திமிலும் நமது அடையாளம்” – நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில்

viduthalai
2 Min Read

மதுரை, ஜன.18-ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் ஜல்லிக்கட்டு குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், சங்ககால தமிழ் இலக் கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளை கள் சிவன், முருகன், பலராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங் களுடன் ஒப்பிட்டு உவமைப் படுத்தப்பட்டுள்ளன.

அக்கால மக்களின் வாழ்க்கை இப்படியிருக்க, அதனை வேறு விதமாக காட்டுவது தீய உள் நோக்கம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் கொண்டது என்று டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர் எழுதிய ஜல்லிக்கட்டு ஒரு ஸநாதனத் திருநாள் என்ற கட்டுரையை பகிர்ந் திருந்தார். இதற்கு மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டை காண வந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் புதிய தலை முறைக்கு பிரத்யே பேட்டி யளித் தார். அப்போது பேசிய அவர்…
” ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ள கருத்து அதிர்ச்சியாக உள்ளது. புராண இதிகாசங்கள் பின்னணியில் ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு என சொல்லலாம். அது தவறில்லை. ஆனால், இதற்கு மாறாக தீய நோக்கோடு அரசியல் செய்கி றார்கள், பிரிவினைவாத அரசி யல் செய்கிறார்கள் என குற்றம் சாட்டுவது முற்றிலும் திசை திருப்பும் வேலை. தொடர்ந்து அவர் இதை செய்கிறார்.

எந்த டி.எஸ்.கிருஷ்ணா பதிவை மேற்கோள்காட்டி சொன்னாரோ அதே டி.எஸ்.கிருஷ்ணாவை வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடை பெற்ற கண்காட்சியில் கோயில் சொத்துகள் கொள்ளை போகி றது என அப்போதும் நிர்மலா சீதாராமன் பேசினார்.
தமிழர்கள் அடையாளம் முன்னோர் வழிபாடு. 20 ஆயிரம் பொருட்கள் கீழடியில் கிடைக்க பெற்றுள்ளன. கடந்த 2 ஆண்டு களில் ஒன்றிய அமைச்சர்
வி.கே.சிங் 35 முறை மதுரை வந்துள்ளார்.

ஆனால் அவர், ஒருமுறை கூட கீழடிக்கு வரவில்லை. நிர்மலா சீதா ராமன் உள்ளிட்ட யாரும் கீழடிக்கு வரவில்லை. அங்கு பெருமதம் கொண்ட அடையாளங்கள் ஏது மில்லை. அதனால் அவர்களுக்கு கசக்கின்றது. தமிழும் திமிலும் நமது அடையாளம்” எனத் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *