தமிழர் திருநாள், பொங்கல் விழா, சுயமரியாதை குடும்ப விழா, பெரியார் விருது வழங்கும் விழா, கலை நிகழ்ச்சிகள் (சென்னை பெரியார் திடல் – 17.1.2024)

1 Min Read

மாலை 4.00 மணிக்கு அன்னை மணியம்மையார் சிலை அருகில் சுனில் வசீகரனின் விளரி இசைத்திரள் வழங்கிய இன எழுச்சி பறை முழக்கம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி தலைமையில் தலைமை கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திராவிடர் கழகம்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் படத்தினை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ பலராமன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ‘காமராஜ் விருதை’ வழங்கியது அவரைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். உடன்: சிறப்பு விருந்தினர்கள் உள்ளனர்.

திராவிடர் கழகம்
கலை நிகழ்ச்சி நடத்திய தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *