தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 13.1.2024 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கும், 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதை பத்தமடை பரமசிவத்திற்கும், பெருந்தலைவர் காமராசர் விருதை உ. பலராமனுக்கும், மகாகவி பாரதியார் விருதை கவிஞர் பழநிபாரதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதை எழுச்சிக் கவிஞர் ம. முத்தரசுவுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதை பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை முனைவர் இரா. கருணாநிதிக்கும், 2023ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதை தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியனுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருதை பி. சண்முகத்திற்கும் வழங்கி, சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பாரதிதாசன் விருதுகளை முதலமைச்சர் வழங்கி பாராட்டு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books