காவல் பணியை செம்மைப்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் : தமிழ்நாடு அரசு

1 Min Read

சென்னை, நவ.24 சென்னை  அசோக் நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில்  காவல் ஆணையம் இயங்கி வருகிறது. காவல் பணியை செம்மைப்படுத்த பொதுமக் களிடம் இருந்து கருத்துகள் வரவேற் கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு நேற்று (23.11.2023)  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

 காவல்துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம், தமிழ்நாடு அரசு 2022ஆ-ம் ஆண்டு 5ஆ-வது காவல் ஆணையம் அமைத்தது. சென்னை அசோக்நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இந்த காவல் ஆணையம் இயங்கி வருகிறது. காவல் பணியை  செம்மைப்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படு கின்றன. கருத்துகளை அஞ்சல் மூலம் தெரிவிக்க விரும்புபவர்கள், ‘தலைவர், 5ஆ-வது காவல் ஆணையம், காவல் பயிற்சிக் கல்லூரி வளாகம், அசோக் நகர், சென்னை-93’ என்ற முகவரிக்கும், மின்னஞ்சலில் அனுப்ப விரும்புவோர், [email protected] என்ற மின்னஞ்சலுக்கும் கருத்துகளை அனுப்பலாம்.

நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புவர்கள், வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மேற்கண்ட முகவரிக்கு நேரடியாக சென்று கருத்துகளை சமர்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 9791987112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *